Sunday, 26 February 2012

கண்ணியம்



அழித்தலும் உதித்தலும்

விழித்திரையில் பதித்தலும் - ஓவியம்

பழித்தலும் இழித்தலும்

வழித்தபின் கழித்தலும் - பாவியியம்

ஓழித்தலும் ஒளித்தலும்

சலித்தபின் மலித்தலும் - பிசாசியம்

முழித்தலும் இளித்தலும்

பலித்தபின் வழிதலும் - அழிவியம்

தெளித்தலும் சுழித்தலும்

வலித்திட மொழிதலும் - கேலியிம்

ஒலித்தலும் அழித்தலும்

விழித்தபின் குளித்தலும் - இறையியம்

தெளிதலும் ஒளிர்தலும்

பளிங்குலகில் நுழைதலும் - கண்ணியம்

Tuesday, 21 February 2012

வெற்றி நமதே

எதிரிகளின் வார்த்தைகளுக்கு
காதுகளை  இறையாக்காதே
சிந்தைகளில் சுமந்து சுமந்து
சித்தத்தை மறந்துவிடாதே
யுத்தத்திற்கு வந்து நின்றாலும்-அவன்
சத்தத்திற்கு அஞ்சிவிடாதே
குடும்பமாய் எதிர்கொண்டால்
குலைத்துவிடலாம் அவன் திட்டத்தை
சுற்றி அவன் வந்தாலும்
வெற்றி என்றும் நமதே

Sunday, 19 February 2012

இ​றைவனின் ம​றை

இறந்தாலும் எழுதப்படும் வாழ்க்​கை ​வேண்டும்
மரித்தாலும் ​பேசப்படும் சாட்சியாக​வேண்டும்
சரீரம் அழிந்த பின்னும் சந்ததி ​உருவாக​வேண்டும்
சுவாசம் ஒழிந்தாலும் பலர் ​சொந்தம் பாராட்ட​வேண்டும்
சத்தியம் ​பேசும் சரித்திரமாக​வேண்டும்
இ​றைவனின் ம​றையில் நீ இடம்​பெற​வேண்டும்

Saturday, 18 February 2012

உனது வாழ்க்கை

அழைப்பை,,,

சிந்திக்க மறந்துபோனவர்கள் பலர்
சிந்தித்தும் பறந்துபோனவர்கள் பலர்
சிந்தனையில் மரத்துப்போனவர்கள் பலர்
சிந்தித்தே மரித்துப்போனவர்கள் பலர்
சிந்தித்துச் சிறக்கச் செயல்படுவோரோ சிலர்
அழைப்பிற்காய் அர்ப்பணிப்பதும்
அர்ப்பணிப்பிற்காய் உயிர் கொடுப்பதும்
உயிர் கொடுத்தபின் அவரோடு உறவாடுவதுமே
உனது வாழ்க்கை

படைத்தவனின் நியதி

மணக்கும் மலர்கள் மரணமடைவதும்
மாலையில் சூரியன் மறைந்து போவதும்
வாழ்ந்த வாழைகள் வாழ்விழப்பதும்
வாழும் மனிதருக்கு வாழ்வளிப்பதும்
கனிகள் காய்கள் கறியாவதும்
கால்நடைகள் வயிற்றில் கல்லறையாவதும்
சிசுக்கள் வயிற்றில் செதுக்கப்படுவதும்
சரீரம் மனிதனில் சவமாவதும்
படைத்தவனின் நியதி
படைத்தவனின் நியதிக்குப் பயப்படாதே இனி நீ

மயானம்​கொடுத்ததுஎவ்வளவு

நீ வராமல் விடியாது